அடர்பனி படர்ந்த அதிகாலை வேளை...
ஆயிரம் கதிர்க்கரங்களால் சோம்பல் முறிக்கும் ஆதவன்...
இலைகள் சிந்தும் நேற்றைய மழையின் மிச்சம்...
ஈரம் காயாத இலஞ்சி குற்றால நெடுஞ்சாலை...
உலகம்மன் சன்னதியின் உரத்த மணியோசை...
ஊர் குருவிகள் கிசுகிசுக்கும் குக்கூ... கவிதை...
எட்டிப்பார்க்கும் புல்நுனியோரப் பனித்துளி
ஏர் சுமந்து வயலுக்குச் செல்லும் விவசாயி
ஒலி பெருக்கியில் பரவும் தொழுகை அழைப்பு...
ஓ.. வென சீறிப்பாயும் பொங்குமாங் கடல்...
ஔவையின் ஆத்திச்சுடி போல் எங்கள் ஊர்...
...அதிகாலை நேரம் அழகானது.